சிங்கப்பூரில் பெண் ஒருவரை மானபங்கம் செய்த ஆடவர் கைது..!!!
சிங்கப்பூரில் பெண் ஒருவரை மானபங்கம் செய்த ஆடவர் ஒருவரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணைப் போல் பாசாங்கு செய்து ஒரு பெண்ணை மானபங்கம் செய்த 21 வயதுடைய ஆடவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மற்ற மானபங்கச் சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட அந்த 18 வயதுடைய பெண்ணை Instagram வழி ஊடக ஆடவர் நாடியுள்ளார்.
தன் சமூக ஊடகக் கணக்கில் விளம்பரம் செய்தால் ஆடைகளும் ரொக்கமும் இலவசமாகக் கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார் ஆடவர். ஆடைகளைக் கொடுக்க பெண்ணின் உடல் அளவு தேவை என்று கூறி அவரைச் சந்தித்தும் இருக்கிறார். அந்த வேளையில் தான் தன்னுடைய வீட்டில் இருந்த பெண்ணை அவர் மானபாங்கம் செய்திருக்கிறார்.
ஆடவரை விசாரித்து வருவதாகக் பொலிஸார் கூறியுள்ளார். பெண்ணை மானபங்கம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் அபராதமும் விதிக்கப்படலாம்.