யார் குற்றியாவது அரிசியாகட்டும் பழமொழி – யார் கட்டினாலும் வீடு கட்டி முடியட்டும் – இது சுவாமிநாதன் மொழி
இலங்கையிலே வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான வீட்டுத் திட்டம் பல இழுபறிகளுக்கு மத்தியில் ஒருவேளை கைநழுவிப் போய்விடுமோ என்று மக்களை அங்கலாய்க்க வைத்துள்ளது. இதற்குக் காரணம் வீடுகளை அமைத்துக் கொடுப்பது இந்தியாவா? இல்லை சீனாவா? என்ற இழுபறி நிலையாகும்.
இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் வடபகுதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாராவது வீட்டைக் கட்டி முடிக்கட்டும் என்ற பாணியில் கருத்துத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனம் ஒன்று வீடமைப்புக்கான கேள்விப்பத்திரத்தை சமர்ப்பித்துள்ள வேளையில் அமைச்சரவையில் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்ப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவா, இந்தியாவா, ஜப்பானா யார் வேண்டுமானாலும் வீடுகளை அமைக்கட்டும். எமக்குத் தேவை வீடுகள் கட்டப்படுவது மாத்திரம் தான் என்று அவர் நேற்றை சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.