ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பதில் அமைச்சர்களுக்கு தடை விதித்த பிரதமர்..!
பிரதமரின் அனுமதி இன்றி இலங்கை ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நியமிக்கப்பட்ட பதில் அமைச்சர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடை விதித்துள்ளார்.மேலும் அண்மையில் பதில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்த லக்கி ஜயவர்தன, அனோமா கமகே மற்றும் புத்திக பத்திரண ஆகியோர் அமைச்சரவை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் இலங்கை பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பிரச்சனையால் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களான ரிஷாட் பதியூதின், கபீர் ஹசீம், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் பதவி வெற்றிடங்களுக்காக பதில் அமைச்சர்களாக சென்ற 10ஆம் திகதி மூன்று பேரை ஜனாதிபதி நியமித்தார்.
பதில் அமைச்சர்களாக குறித்த மூவரையும் நியமிப்பது தொடர்பில் பிரதமரான என்னோடு இது பற்றி எந்தவொரு கலந்துரையாடலையோ அல்லது அறிவிப்பையோ ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. எனவும், இந்த மூவரும் பிரதமரின் அனுமதியின்றி பதவிப் பிரமாணம் நடைபெற்றதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அமைச்சுகளுக்கான அமைச்சர் பதவிகளுக்காக பிரதமர் பரிந்துரை செய்த பெயர்களை ஜனாதிபதி நிராகரித்தார் எனவும் பிரதமர் தெரிவித்தார்.