எனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- கோத்தபாய ராஜபக்ச
இலங்கையில் நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களைப் போல் வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியது போல செயற்படுவேன் எனவும், இலங்கை மக்கள் அனைவருக்கும் எனது சேவை உரித்தாகும் எனவும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மையில் இடம்பெற்ற புதிய ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து கூறுகையில்அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துமாறு தன்னிடம் விடுத்த வேண்டுகோளையும் உரிய முறையில் நிறைவேற்ற எதிர் பார்த்து காத்திருந்தாக அவர் இந்த வேளையில் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலை நல்ல முறையில் நடத்த உழைத்த தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சகல தரப்பினருக்கும் தனது மணமாந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளர்.