“வலிக்கிறது அடிக்காதீர்கள்” என கதறிய 9 வயது சிறுமி.! தாயாரின் கண்முன்னே அடித்து கொலை செய்த கொடூர சம்பவம்.!!!
இலங்கையில் மீகஹவத்த கந்துபொட பகுதியில் 9 வயது சிறுமி ஒருவரை கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்திமா றிப்fபா என்ற 4ம் தரத்தில் படிக்கும் மாணவியே இவ்வாறு அடித்து கொலை செய்யப் பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது: குறித்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் மந்திரவாதி பெண் ஒருவர் குடும்பத்தில் நடக்கும் அனைத்தையும் சரியாக சொல்லுவதாக ஊர் மக்கள் நம்பி வந்த நிலையில் குறித்த சிறுமியின் தாயாரும் நம்பி யுள்ளார்.
குறித்த மந்திரவாதி பெண்ணிடம் சென்ற போது சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாக மந்திரவாதி கூறியுள்ளார். இதனை தொடந்து சிறுமியை ஆலயத்திற்கு அலைத்து வந்த தாயார் மந்திரவாதியிடம் சிறுமியை கொடுத்துள்ளார். இதன்போது சிறுமியின் உடைகளை கழட்டிய மந்திரவாதி பெண் சிறுமியின் உடல் முழுவதும் எண்ணைய் பூசி பிரம்பால் தொடர்ந்து அடித்துள்ளார்.
வலியால் சிறுமி துடித்ததுடன் ” அடிக்காதீர்கள் வலிக்கிறது ” என கதறி அழுதுள்ளார். Aunty வலி தாங்க முடியவில்லை, அடிக்காதீர்கள், அம்மா காப்பாற்றுங்கள் என சிறுமியின் கத்தியது பக்கம் பக்கத்து வீட்டாருக்கு கேட்டுள்ளது. அவர்கள் ஆலயத்திற்கு வந்த போது அடி தாங்க முடியால் சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக பியகம வைத்தியசாலைக்கு சிறுமியை எடுத்துச் சென்றபோது சிறுமி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.இதனை தொடர்ந்து மந்திரவாதி பெண் மற்றும் சிறுமியின் தாயை மீகஹவத்த பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.!