வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்..! மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்கள். அதிகம் பகிருங்கள்..!!
கொரோனா வைரஸை கட்டுப் படுத்த உலக நாடுகள் எவ்வளவு முயன்றாலும் முடியாமல் தடுமாறி வரும் நிலையில் இந்தியா போன்ற சில நாடுகள் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என விட்டு விட்டது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு மட்டும் போராடினால் போதாது. ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கொரோனாவை சில நாடுகள் முழுவதும் கட்டும் படுத்தி இருந்தது, அதில் இலங்கையும் ஒன்றாக இருந்தது. ஆனால் அண்மையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி படுத்தப் பட்ட நிலையில் அங்கு பணி புரிந்தவர்கள்,
அவர்களுடன் பழகியவர்கள் என பிசிஆர் பரிசோதனை செய்ததில் இது வரை 1398 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது வரை நாடு முடக்கப் படாத நிலையில் நாட்டின் பல இடங்களில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா தொற்று பற்றி நேற்றைய தினம் மீடியாக்களை சந்தித்த சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜயருவன் பண்டார, இம்முறை பரவும் கொரோனா தொற்றானது மிகவும் ஆபத்தானதாகும். இந்த கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து சுமார் 500 பேருக்கு பரவும் ஆபத்தை கொண்டது.
இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவிய சில செக்கன்களில் மிக வேகமாக வைரஸை உருவாக்க ஆரம்பிக்கிறது. இதில் இருந்து இலங்கை மீள்வது மிகவும் கடினமானது. மக்களால்.மட்டுமே தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தான் ஆட்சி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்..!