கல்முனையில் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் கலகொட அத்தே ஞானசார தேரரால் முடிவுக்கு வந்தது..!!
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் 06 நாட்களாக தொடர்ந்தும் நடைபெற்று வந்த நிலையில் இதுக்கு ஆதரவு அளிக்கும் முறையில் பல அரசியல் தகைமைகள் வந்து பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். அது போராட்டக்காரர்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்காமையால் தொடர்ந்தது போராட்டம். இந்த போராட்டத்தில் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
கல்முனை உண்ணாவிரத போராட்டத்திக்கு முடிவு காணும் முறையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று போராட்டக்களத்திற்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையிலும் பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் மாறி மாறி நடைபெற்று இறுதியில் போராட்டம் நிறைவடைந்தமை.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான சம்பவத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் நல்லதொரு முறையில் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நான் தீர்வை பெற்றுத் தருவேன் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் உறுதிமொழி கூறினார்.இதனை தொடர்ந்து கல்முனையில் நடத்தப்பட்ட போராட்டம் நிறைவடைந்தது. மேலும் ஞானசார தேரர் கூறியது போல் நல்ல முடிவு கிடைக்கா விட்டாள் இப் போராட்டம் மேலும் பல விளைவுகளின் மத்தியில் மீண்டும் தொடரும் என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டார்.