மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!
அனைத்து பாடசாலைகள் மூலம் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளவர்கள் தமது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் உறுதிப் படுத்த முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிரைக் குடிக்கும் கொடிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழக அனுமதிகளை உறுதிப்படுத்தும் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் இது போன்ற நிலையில் தற்போது குறித்த உறுதிப்படுத்தல்களை பாடசாலைகளின் அதிபர்களும், உப அதிபர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்வர் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.