மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவுள்ள இலங்கை விமான சேவை..!!
இலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையத்தையும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயிரைக் பருகும் கொடிய கொரோனா வைரஸ் ஒழிப்புச் செயலணி இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்த அறிக்கையை ஒப்பைடைத்துள்ளது.
அதேநேரம் வீழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலா துறையை மீளக்கட்டியமைத்தலுக்கான நடவடிக்கை மற்றும் எதிர்கால திட்டங்கள் குருத்து கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் சமூகப்பரவலிலிருந்து அடையாளம் காணப்படவில்லை. அதனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது