பாராளுமன்றத் தேர்தல் குறித்து தாக்கல் செல்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளைய தினம் வரை ஒத்தி வைப்பு!
எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 5 பேர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் தொடர்பாக விசாரணைகள் இன்று எட்டாவது நாளாகவும் இடம்பெற்றன.
மேலும் இது போன்ற நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை நாளைய தினம் முற்பகல் 10 மணிவரை நீதியரசர்கள் ஆயம் ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.