ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார் இன்று!
இன்றைய தினம் ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா உயிரிழந்துள்ளார். 89 வயதுடைய மார்ஷல் பெரேரா கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் உட்பட பல பதவிகளை வகித்துள்ள இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.