இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!!
இலங்கையில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்த தகவலை சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
மேலும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1882 ஆக அதிகரித்துள்ளது