43 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது..!!!
யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சாவுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 43 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காங்கேசன்துறை கடற்படையினர் ஒன்றிணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்படடதோடு, அவர்களிடம் இருந்து கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளுக்காக இந்த சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.