கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தெற்காசிய நாடுகளில் பெண்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது…!!!
சீனாவில் இயங்கி வரும் வீ- செட் சமூக ஊடகத்தின் ஊடாக தெற்காசிய நாடுகளில் பெண்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியிலிருந்து வந்த ஈ. வை 264 எனும் விமானத்தின் ஊடாக அவர் நாட்டிற்குள் பிரவேசித்த போது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த 28 வயதுடைய சந்தேக நபரின் கையடக்க தொலைப்பேசியினை சோதனைக்கு உட்படுத்திய போது பல தகவல்கள் வெளியானதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படியில் அவர் வீ- செட் ஊடாக தான் ஒரு பெண் எனவும், சீனாவில் வேலை வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்த தெற்காசிய பெண்களை அழைத்து சென்று சீனாவில் விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும் இந்த சந்தேக நபர் இலங்கை இருந்து அடையாளப்படுத்தப்பட்ட பெண்களை அழைத்து செல்வதற்காகவே இவ்வாறு இலங்கை வந்துள்ளதாகவும், அவர்கள் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.