இன்று திறந்து விட்ட இரணைமடு குளத்தின் வான்கதவுகள்..!!!
கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஆறு அங்குலம் அளவிற்கு அதிமான நீரை வெளியேற்றுவதற்காக இன்றைய தினம் திறந்து விடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொதுமக்களும் அவதானமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் தொடந்து பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. குளத்தில் தேங்கியுள்ள மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இரணைமடு குளம் 36 அடி வரையில் நீரை சேமிக்க கூடியதாக உள்ளது ஆனால் இதுவரையில் அதன் நீர்மட்டம் 31 அடியாக காணப்படுகின்றது. அங்கு பெய்யும் தொடர் மழையால் அதிகளவு நீர் குளத்திற்கு வந்து கொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் குளத்தின் இரண்டு வான்கதவுகளும் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுவருகின்றது.
ஆகவே இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் இது தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.