முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு….!!!
இன்றைய தினம் காலை ஆறு மணியளவில் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்பு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் காரணத்தால் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 21 அடியாக உள்ள நிலையில் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரைச் சேமிக்கக் கூடியது இருப்பினும் அதிகளவு நீர் வந்து கொண்டிருப்பதனால் 21 அடி நீர் மட்டத்தில் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
தண்ணிமுறிப்பு குளத்தின் வான்கதவுகளில் இருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் அதிகளவிலான நீர் வெளியேறியதனால் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்றிருந்த விவசாயிகள் 11பேர் வரமுடியாமல் சிக்கியிருந்த நிலையில் இராணுவம், கடற்படை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் படகு மூலம் இந்த நபர்களை மீட்டுள்ளனர்.