ஜனாதிபதியை அவமதித்த பிரபல சிங்கள பாடகர்..!!!
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சவை அவமதித்த பிரபல சிங்கள பாடகர் ஒருவர் மேடையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று பரபரப்பாக தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் பிரபல வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியின் போதே இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிபருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பிரபல பாடகரும் வயலின் வாசிப்பவருமான சித்ரால் சோமபால என்பவரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதிபருக்கு எதிராக அவர் கருத்து வெளியிட்டமையினால் அங்கிருந்தவர்கள் சத்தம் எழுப்பியுள்ளனர். இதனால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த பாடகர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.