80 வயதுடைய ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டுமா – நிதியமைச்சர் மங்கள சமரவீர
பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் ஒரு பல்கலைக்கழக கல்வியியலாளராக இருக்கலாம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் 80 வயதுடைய ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டுமா என மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநராக பேராசிரியர் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டமை தொடர்பாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர இந்த பதிவை பதிவேற்றியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷமன் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.