வெகு விரைவில் தொழில் பற்றாக்குறைக்கு ஒரு நல்ல தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுப்பேன் – பிரதமர் வாக்குறுதி
தொழில் பற்றாக்குறைக்கு வெகு விரைவில் ஒரு நல்ல தீர்வை பெற்றுக்கொப்பேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார். இன்றைய தினம் தங்காலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“நிறைவேற்று அதிகாரத்தையும் அமைச்சரவை அதிகாரத்தையும் கொண்டு நாட்டு மக்களுக்கு முழுமையான சேவையினை தொடர்ந்து முன்னெடுப்போம். புத்தாண்டில் பல எதிர்பார்ப்புக்களை கொண்ட நாட்டை அபிவிருத்தியடைய செய்து முன்னேற்றமடைய வேண்டும். கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் முழுமைப்படுத்தப்படும்.
பரீட்சையில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஒரு தொழிலை பெற்றுக் கொள்வது கடினமான விடயமாகும். அனைவருக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் 10000 தொழில்வாய்ப்பினை வழற்குவதின் ஊடாக முதற்கட்டமாக நிறைவேற்றப்படும் என மகிந்த தெரிவித்துள்ளார்.