இந்தியாவுக்கு எதிரான இருபது-20: இலங்கை அணியில் மத்யூஸ்!
சகலதுறை கிரிக்கெட் வீரரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான அஞ்சலோ மத்யூஸ், 16 மாதங்களின் பின்னர் மீண்டும் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ள இருபது-20 தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணியிலேயே அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
இவர் கடைசியாக 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றிருந்தார். தற்போது மீண்டும் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இருபது-20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம் வருமாறு-
லசித் மலிங்க (அணித்தலைவர்), தனுஷ்க குணதிலக, அவிஷ்க பெர்னாண்டோ, மத்யூஸ், தசுன் ஷானக, குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல, தனஞ்சய டி சில்வா, இசுரு உதானா. பனுகா ராஜபக்ச, ஒஷாடாபெர்னாண்டோ, ஹசரங்க, லஹிரு குமார, குசல் மெண்டிஸ், சண்டகன், கசுன் ராஜித.