சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள 33 மாணவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வந்த சிறப்பு விமானம்..!!!
கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதனை தடுக்கும் முயற்சியில் வைத்தியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் உறக்கம் , உணவு அனைத்தையும் மறந்து இவ் வைரஸ்க்கான மருந்தை கண்டு பிடிக்கும் நோக்கில் தீவிரமாக போராடி வருகின்றனர். சீனாவில் உயிருக்கு போராடும் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற போராடும் வைத்தியர்களை பார்க்கி்ற போது தான் கவலை தொற்றிக் கொள்கிறது என்கின்றனர் மக்கள்.
அந்த அளவிற்கு நோயில் இருந்து மக்களை காப்பாற்ற போராட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் நேற்றைய தினம் பிற்பகல் 3.55 மணியளவில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இலங்கையை சேர்ந்த 33 மாணவர்களை அழைத்து வரச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 1422 ரக விமானம் என்னும் சிறப்பு விமானம் வுஹான் விமான நிலையத்தில் இருந்து மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
மேலும் இந்த விமானம் வுஹான் டியெங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், இன்று காலை 4.05 மணியளவில் அங்கிருந்து 33 இலங்கை மாணவர்களை ஏற்றிக்கொண்டு இலங்கையை வந்தடைந்தது. .