நாடு முழுவதும் குவிக்கப்படவுள்ள இராணுவ வீரர்கள்!
இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இராணுவ வீரர்களை கடமையில் ஈடுப்படுத்துவதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெயிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. பொது ஒழுங்குகளை பாதுகாக்க இராணுவ வீரர்கள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குவிக்கப்பட உள்ளனர். இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கை என கூறப்பட்டது.