கடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிள் மர்ம முறையில் உயிரிழப்பு..!!
கடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிள் மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் கான்ஸ்டபிலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண் மற்றும் குறித்த பெண்ணின் மருமகனான டீ.மஞ்சு என்பவரின் மனைவி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். கான்ஸ்டபிள் உடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண் முகத்துவாரம் – மட்டக்குளி பகுதியில் வைத்து குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
டீ.மஞ்சுவின் மனைவி வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் கடத்தப்பட்ட நிலையில் பன்னல – வேஹஹெர – புலகொட பகுதியிலுள்ள வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். அத்துடன் இந்த பொலிஸ் உத்தியோகத்தரை கிரிபத்கொட பகுதியிலிருந்து கடத்துவதற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியினையும் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து காவல்துறையினர் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.