நாட்டின் நிலவும் காலநிலை மாற்றம்..!!
இலங்கையில் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என வானிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஆகவே குறித்த பிரதேச மக்கள் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் சந்தர்ப்பங்களில் அதிகளவு நீரை அருந்துமாறும் இள நிற ஆடைகளை அணிந்து வெளியே செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குறித்த காலப்பகுதியில் சிறுவர்களை வாகனங்களுக்குள் வைத்திருப்பதைத் தவிர்க்குமாறும் வானிலை மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.