கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு விசேட சோதனை..!!!
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரும் பயணிகளை விசேட சோதனை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். கொடிய கொரோனா வைரஸ் தென் கொரியாவில் பரவி வருகின்ற காரணத்தால் அந் நாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் தொடர்பில் இலங்கை சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
அதன் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்யப்படவுள்ளது.
48 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது வரையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,771 ஆக அதிகரித்துள்ளது. தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா 12 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஈரானில் 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.