கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவச அவசரமாக தரையிறங்கிய விமானம்..!!
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன.
சவுதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்குச் சென்ற பயணிகள் விமானமே நேற்றைய தினம் அதிகாலை 2.30 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தரையிறங்கிய குறித்த விமானத்தில் வந்த இருவர் கடும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி அரேபியாவின் கிங்க் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்திற்கு பயணம் செய்த நிலையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த நிலையில், குறித்த இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் இருவரும் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அத்துடன், உயிரிழந்த இருவரினதும் உடல்கூறுகள் பரிசோதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு உடல்களையும் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இருவரையும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த பின்னர் விமானம் மீண்டும் இந்தோனேஷியாவுக்கான பயணத்தை தொடங்கியுள்ளது.