முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய பிரதமர்..!!
இன்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற ர்வ கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் போது, “ஊரடங்கு சட்டம் “அமுல்படுத்தப்படும் வேளையில் தோட்டத்தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடவும், தோட்ட தொழிற்சாலைகள் இரவு நேரத்தில் தொழிற்படவும், தொழிலாளர்களின் வருமானத்துக்கு பாதகம் ஏற்படா வண்ணம் தடையின்றி தொழில் வழங்கப்பட வேண்டும்” என மனோ கணேசன் கோரிக்கை விடுத்திருந்தார்.
“வயல்களில் விவசாயம் செய்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தோட்ட தொழிலாளருக்கும் வழங்கப்பட வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அதை மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர், மலையக பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை உடன் வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.