சாவகச்சேரியில் 21 வயது பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!! சோகத்தில் பெற்றோர்!
சாவகச்சேரி மீசாலையில் 21 வயது பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தென்மராட்சி – மீசாலை கிழக்கில் நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய சோமசுந்தரம் சிந்துஜா என்ற இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.