ஆப்கானிஸ்தானுக்கும் தலிபானுக்கும் இடையே நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை காலாவதியாகி விட்டது- டிரம்ப் தெரிவிப்பு..!!
ஆப்கானிஸ்தானுக்கும் தலிபானுக்கும் இடையே நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை காலாவதியாகி விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தலிபான்கள் மீது அமெரிக்க இராணுவத்தினர் மீண்டும் தாக்குதலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
அத்துடன் என்னை பொறுத்த வரைக்கும் இந்த அமைதிப்பேச்சு வார்த்தை முடிந்துபோன விஷயம் என வெள்ளை மாளிகையில் அறிவித்த டிரம்ப், 18 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஆப்கான் படைகளுக்கும் தாலிபன்களுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மற்றும் தலிபான் ஜனாதிபதியை ரகசியமாக கேம்ப் டேவிட் தீவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும் இந்த நிலையில் தலிபான்கள் நடத்திய தாக்குதலை பற்றி பேச்சு வார்த்தையை அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.