வவுனியா வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு…!!!
வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று காலை இந்த தீவிர தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அந்த வகையில், கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்று நாளையதினம் ஆளுநரின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது. எந்த ஒரு முன் அறிவித்தாலும் இன்றி பொலிஸார் வைத்தியசாலையில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இடுபட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.