ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!!
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுவித்தமைக்கு எதிராக சிறிலங்கா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மேலும் ஸ்ரீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பின் கீழ் தேரரை விடுதலை செய்தமை குறித்து கண்டிக்கும் செயற்பாட்டில் இந்த மனுத் தாக்கல் இடம்பெற்றுள்ளது.
இந்த மனுக்களை கண்டுகொள்ளாமல் போன ஊடகவிலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் தொடர்பாக ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ரத்துசெய்யுமாறு கூறப்பட்டுள்ளதுடன் மனுக்களின் விசாரணையை ஜுலை மாதமே நடத்துமாறு குறிபாக அடுத்தடுத்துவரும் தினங்களில் நடத்துமாறும் கூறப்பட்டுள்ளது.