இந்தியாவில் திருமணமாகி 15 நாட்களில் மனைவி ஓட்டம்..!! அதிர்ச்சியில் கணவர்..!
இந்தியாவின் ஹரியானாவை சேர்ந்தவர் சுரேந்தர் (36). என்பவரின் முதல் மனைவி இறந்து இரண்டு வருடமாகிய நிலையில் இவர் இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்தார். மேலும் இந்த சூழலில் நிலையில் ஜோகிந்தர் மற்றும் வீரேந்தர் என்ற இருவர் தங்களை திருமண தரகர் என கூறி சுரேந்தரை கேட்டுக்கொண்டார்.
அதற்கு அவர்கள் 28 வயது பெண்ணொருவர் சுரேந்தரை திருமணம் பண்ண விரும்புவதாகவும், இந்த திருமணத்தை நடத்தி வைக்க தங்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுக்கவும் சம்மதம் தெரிவித்தார். மேலும் பெண் அழகாக உள்ளதால் ஒரு லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு 15 நாட்களுக்கு முன்னர் சுரேந்தர் அவளை திருமணம் செய்தார். இந்நிலையில் தனது சொந்தக்காரர்களை பார்க்க ஊருக்கு போக வேண்டும் என்று மனைவி கூறிய நிலையில் அவளுடன் சுரேந்தரும் ரயில் நிலையம் சென்றார்.அங்கு சுரேந்தரின் தொலைபேசியை வாங்கி உறவினருடன் பேசுவதாக கூறிய மனைவி திடீரென மாயமானார்.
நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பாத நிலையில் தரகர்களான ஜோகிந்தர் மற்றும் வீரேந்தரிடம் இது குறித்து சுரேந்தர் கூறினார். இதற்கு அவர்கள் சுரேந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு பொய்யான வழக்கு சுமத்தி பொலிஸில் சிக்க வைத்துவிடுவோம் என கூறினார்.இதனை தொடர்ந்து சுரேந்தர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பொலிஸ் புகார் கொடுத்தார்.தன்னுடைய பணம் மற்றும் நகையையும் எடுத்துக்கொண்டு தனது மனைவி ஓடிபோய் விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.