இலங்கையில் மரண தண்டனை குறித்து ஜனாதிபதி எடுத்த தீர்மானம்..!!
இலங்கையில் மரண தண்டனை செயற்படுத்துவது மீதான தடையை தொடருமாறு இலங்கைக்கு அழைப்பு விடுப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மேலும் இந்த மரண தண்டனையை மீண்டும் செயற்படுத்துவது என்ற இலங்கையின் தீர்மானம் குறித்து நாங்கள் பெரும் கவலை அடைகின்றோம் என்று பிரித்தானியாவின் வெளியுறவு செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஆறு மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மரண தண்டனையை செயற்படுத்துவது தொடர்பான உலகளாவிய தடைக்கு ஆதரவாக அன்று இலங்கை வாக்களித்தது. ஆனால் இன்று இலங்கையில் மரண தண்டனை செயற்படுத்த தீர்மானம் எடுத்துள்ளது. ஆனால் இலங்கை செயற்படுவது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும்.
இந்த நிலை இலங்கையின் சர்வதேச நிலைப்பாட்டையும், சுற்றுலா தலமாகவும், வணிகத்திற்காக வளர்ந்து வரும் மையமாகவும் உள்ள அதன் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும்.வகையில் இலங்கை செயற்பட்டு வருகின்றது. மரண தண்டனையை செயற்படுத்துவது பயங்கரவாதத்தை எதிர்ப்பது உள்ளிட்ட சட்ட அமுலாக்கப் பிரச்சினைகளில் பிரித்தானியா இலங்கையுடன் ஒத்துழைப்பதை தவிர்க்க முடியாமல் மிகவும் கடினமாக்கும். என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.