பெண் மருத்துவரை அறையில் அடைத்து வைத்த மருத்துவமனை நிர்வாகம்..! கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ..!!
மருத்துவர் ஒருவர் வைத்தியசாலை நிர்வாகத்தால் அடைத்து வைக்கப் பட்ட சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஹைதராபாத் நலகுந்தா அரச வைத்தியசாலையில் பணியாற்றி வருபவர் சுல்தானா. இவரது பணி காரணமாக இவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தன்னை வீட்டில் 14 நாட்கள் தனிமை படுத்திக் கொண்ட சுல்தானாவிற்கு சற்று தாக்கம் அதிகமாக தும்பே தனியார் மருத்துவ மனையில் அட்மிட் ஆனார். இங்கு சிகிச்சை முடிந்து 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் கட்டிய நிலையில் வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார்.
ஆனால் வைத்தியசாலை நிர்வாகமோ வீட்டிற்கு செல்ல அனுமதிக்காமல் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பணம் தர வேண்டும் என கூறியுள்ளது. இதனை சுல்தானா மறுத்ததால் அவரை தனி அறையில் போட்டு அடைத்துள்ளனர். அறையில் இருந்தபடி சுல்தானா தனக்கு கொடுமை நடப்பதாகவும் தன்னை மீட்கும் படியும் வீடியோ வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து சந்தர்காட் பொலீஸார் அதிரடி காட்டி தும்பே மருத்துவமனை சென்று சுல்தானாவை மீட்டனர். இந்த நிலையில் தும்பே மருத்துவமனை நிர்வாக தலைவர் டாக்டர் அப்துல்லா சலீம் கூறுகையில் சுல்தானாவை பணம் கேட்டு தொல்லை கொடுக்கவில்லை,
அவருக்கு கொரோனா வைரஸ் முழுமையாக குணமாகாத நிலையில் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தார், அதனால் தான் அவரை ரூமில் அடைத்தோம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரனைகள் இடம்பெற்று வருகின்றது..!!
Dr. Sultana, DMO Fever Hospital, Hyderabad who got affectd with #COVID19 & was admittd in #ThumbayHospital_Chaderghat. She was askd 2 pay ₹1.15 Lakhs 4 a day, She paid ₹40k. She was detaind 4 non payment of bill. This is happening with a #covidwarriors doctor. Kindly help her pic.twitter.com/5zSsMfRMNl
— Sheikh Mohammad Sabeer (@Sheikh_Sabeer) July 5, 2020