இலங்கையிடம் வருத்தம் தெரிவித்தது சுவிஸ்!
இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதரக பெண் அதிகாரி தொடர்பான சம்பவத்துக்கு சுவிட்சர்லாந்து அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு, கடந்த 30ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு-
“இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சுவிட்சர்லாந்துத் தூதரகத்தில் பணியாற்றும், உள்நாட்டுப் பணியாளர் தொடர்பில் தவறான புரிதல் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் கடந்த சில வாரங்களாக விரிசல் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த விவகாரம் தொடர்பாக பொதுவௌியில் வெளியிடப்பட்ட தகவல்கள், இரு நாடுகளின் நல்லுறவில் வேண்டத்தகாத அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கை அரசைக் களங்கப்படுத்தும் நோக்கம் எதுவும் சுவிட்சர்லாந்துக்குக் கிடையாது. அதற்காக நாம் வருத்தம் அடைகிறோம்” என்றுள்ளது.