தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கில் நடிக்க தடை விதிக்ககோரி மனு..!!
தென்னிந்திய சினிமாவில் தமிழ், கன்னட, மலையாள நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான வாய்ப்புகள் குறைவடையும் நிலை உருவாகிவருகின்றது. தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாவை விட தமிழ் சினிமாவுக்கான வரவேற்பு எப்போதும் அதிகம் தான்.
தெலுங்கில் உருவாகும் பல படங்களில் தமிழ் கலைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக மனு ஒன்றினை தெலுங்கு நடிகர் சங்கம், தெலுங்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
அதில், தற்போது வெளியாகும் தெலுங்கு படங்களில் அதிகமானவற்றில் பிற மாநில கலைஞர்களே அதிகம் நடிக்கின்றார்கள். இதனால் எமது மாநில கலைஞர்கள் தொழில் வாய்ப்புகள் இன்றி வாழ்வாதார சுமை, பணப் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் அவதிப்படுகின்றனர்.
இவற்றை நிவர்த்தி செய்ய இனி வரும் காலங்களில் பிற கலைஞர்களை நடிக்க வைக்க கூடாது எனவும், எமது கலைஞர்களுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.