என்னால் யாரெனும் சீமானின் கட்சிக்கு வாக்களித்திருந்தால் மன்னித்து விடுங்கள்..! பெண்ணின் பரபரப்பு வீடியோ இதோ…!
என்னால் நாம் தமிழர் கட்சிக்கு யாரேனும் வாக்களித்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள், என பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்தவாரம் நாங்குநேரி தொகுதியில் சீமானின் நாம் தமிழர் கட்சி படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து சீமான் மீது பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த தோல்விக்கு காரணம் சீமான் ராஜீவ் காந்தியின் மரணம் பற்றி தவறாக பேசியது தான் என கல்பனா என்கிற பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். கல்பனா மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ் ஈழம் மீதான விருப்பத்தில் தான் “நாம் தமிழர் கட்சி” யில் இணைந்தேன். ஈழ மக்களுக்காக பேசும் போது எனக்கு சீமன் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது.
இதனால் கட்சிக்காக பிரச்சாரம் செய்தேன். ஆனால் ராஜீவ் காந்தி அவர்களை கொலை செய்தது தமிழீழ விடுதலை புலிகள் தான் என்ற ரீதியில் பேசியது எனக்கு பிடிக்கவே இல்லை, புலிகள் தவறு செய்யவில்லை என பலரும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கையில் சீமான் பேசியது முரணானது,
அதற்காக மன்னிப்பு கேட்க கூட அவருக்கு மனமில்லை, தொடர்ந்தும் அதே மன நிலையில் இருந்து வருகிறார். இதன் பின் என்னால் அந்த கட்சியில் இருக்க முடியாது. அதனால் விலகுகிறேன். என்னால் யாரேனும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்…!!
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களின் ராஜிவ் காந்தி குறித்த பேச்சை கண்டித்து அந்த கட்சியில் இருந்து விலகிய கல்பணா!#நாம்தமிழர்கட்சி #Kalpana #Seeman #சீமான் pic.twitter.com/qnt0o8VjEn
— G Vickey | ஜி விக்கி (@VickeyTwitzz) November 2, 2019