தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை மட்டும் இன்றி தமிழ் மக்கள்களையும் அடியோடு வெறுக்கும் கோத்தபாய…!!!
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளையும், தமிழ் மக்களின் அடியோடு வெறுக்கின்றார் என பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம். நான் கோத்தபாயவின் ஊடக பேச்சாளர் என்ற வகையில் இதனை கூறுகின்றேன் அவர் இந்த நிபந்தனைகளை வாசிக்க கூட அது பலனற்ற விடயம் என்று கூறுகின்றார். நான் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன்.
அதே வேளையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச இந்தக்கோரிக்கைகள் தொடர்பில் பகிரங்கமாக கருத்து கூறட்டும் என நான் சவால் விடுக்கின்றேன்.
எமது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை பார்ப்பதற்கு கூட தயாரில்லை, 13 யோசனைகளையும் அவர் அடியோடு வெறுப்புடன் நிராகரித்துவிட்டார். பிரபாகரனின் கோரிக்கைகளை விட அதிகமான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்