ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதி …!!!
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வடபகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது வழங்கிய வாக்குறுதிகள் தென்னிலங்கை மக்களுக்கு மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் வடபகுதியில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட கோத்தபாய ராஜபக்ச அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக தமிழ் மக்கள் மத்தியில் உறுதியளித்துள்ளார். அதேவேளை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாண நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் பங்கேற்க கோத்தபாய ராஜபக்ச மறுத்திருந்தார்.
மேலும் இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையா என குறித்த ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்கால ஜனாதிபதியாக வந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக கோத்தபாய வடபகுதி மக்களுக்கு வழங்கிய முதல் வாக்குறுதியாகும்.
கோத்தபாயவுக்கு அரசியல் கைதிகள் மீது அனுதாபம் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் மீது திடீர் அனுதாபம் எப்படி ஏற்பட்டதென குறித்த ஊடகம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வழக்கு விசாரணையை தவிர்த்த கோத்தபாய ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது