வளிமண்டல திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!
இலங்கையில் மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலையில் இன்று ஓரளவு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, சில இடங்களில் 75 மில்லிமீற்றர் முதல் 100 மில்லி மீற்றர்வரை பலத்த மழை பெய்யக்கூடும். அதையடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
அதேவேளையில் நாட்டின் ஏனைய பாகங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.