யாழில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இன்று அடையாள உண்ணாவிரதம்.
இலங்கையில் சிறைகளில் விசாரணைகளின்றி வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டி இன்று அவர்களது உறவினர்களால் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் போராட்டம் பிற்பகல் 2.00 மணிவரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தினால் இப் போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாகவே இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.