தினமும் “கிராம்பு” ஒன்றை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்..! ஏன் தெரியுமா.? இதை படியுங்கள்..!!
“கிராம்பு” எல்லா இடத்திலும் இலகுவாக கிடைக்கக் கூடிய மருத்துவ பொருளாகும். கிராம்பை பயன்படுத்திவருவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது, இன்று கராம்பின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். கராம்பை எடுத்து தட்டிக் கொள்ளவும், தட்டிய கராம்பை தண்ணீரில் போட்டு மூடி வைத்துவிட்டு சுமார் 1 மணி நேரம் கழித்து வடிகட்டி குடித்து வாருங்கள்.
அதாவது ஒரு லீட்டர் தண்ணீர் எடுத்தால் அதற்கு 5 தொடக்கம் 10 வரை கராம்பு பயன்படுத்தலாம். இந்த தண்ணீர் குடிப்பதால் வாயில் ல கிருமிகள் அழிகிறது, இதனால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்குகிறது. அத்துடன் பல் சம்மந்தமான நோய்களுக்கு இந்த நீர் சிறந்த தீர்வாகிறது.
அடுத்து கராம்பு 3 எடுத்து நன்றாக தட்டி ஒரு கப் பாலில் போட்டு கொதிக்க வையுங்கள், நன்றாக கொதித்ததும் இறக்கி விரும்பினால் வடிக்கலாம், இல்லாவிட்டால் அப்படியே குடிக்கலாம், இப்படி குடித்து வந்தால் வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்றவை முற்றாக நீங்கி விடும்.
அதாவது சிறந்த அல்சர் விரட்டியாக இந்த கராம்பு இருக்கிறது. அடுத்தது பல் வலி, பல் கட்டி ,பல்லில் இரத்தம் வடிதல் போன்றவற்றிக்கும் கராம்பு சிறந்த மருந்தாகிறது. கராம்பு ஒன்றை தட்டி மென்று வரலாம் இது மிக ஆரோக்கியமான மருந்தாகும்..!!