சைனஸ் தொல்லை தொடர்கிறதா.!? அட கவலையை விடுங்க..இயற்கை முறையில் இலகுவான தீர்வு இதோ..! அதிகம் பகிருங்கள்…!!
மிக பெரிய நோய்களை எல்லாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளும் நாம் சில சாதாரண நோய்களை பெரிதாக எடுத்துக் கொள்கிறோம். அதற்காக நாம் கொடுக்கும் விலையும் அதிகம் அதான். இன்று சாதாரண நோயான சைனஸ் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று தான்.
சைனஸ் அத்தனை பெரிய நோய் அல்ல ஆனாலும் இந்த நோயை போல் தொல்லை கொடுக்க எந்த நோயாலும் முடிவதில்லை. சுத்தமில்லாத காற்றை சுவாசிப்பதால் உருவாகும் சைனஸ் அடிக்கடி தும்மல், மூக்கால் நீர் வடிதல், சளி, போன்றவை தான். தும்மி தும்மியே அன்றைய நாள் வீணாகி விடும். சரி இதற்கு தீர்வு தான் என்ன.?
வைத்தியசாலை சென்று வந்தாலும் மறுபடியும் இது தொற்றிக் கொள்கிறதே என்ன செய்வது.?இதற்கு தேவையானவற்றை பார்க்கலாம். வேப்பம் கொழுந்து, துளசி, அதிமதுரம், வெற்றிலை, திப்பிலி, சுக்கு, மிளகு, சீரகம் இவை தான் தேவையான பொருட்கள்.
இதில் சுக்கு மற்றும் அதிமதுரம் இரண்டிலும் சின்ன சின்ன துண்டுகள் எடுத்து கொஞ்சம் தட்டி வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை வைத்து எப்படி கசாயம் செய்வது என பார்க்கலாம்.முதலில் இரண்டு 1 1/2 கப் நீரை பாத்திரம் ஒன்றில் ஊற்றி அதனுடன்.
துளசி, வேப்பம் கொழுந்து, வெற்றிலை, மற்றும் அதி மதுரம், என அனைத்தையும் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். நீரின் நிறம் மாறியதும் வடித்து ஆற வையுங்கள். ஆறிய பின் காலை மாலை என இரண்டு வேலை குடியுங்கள். சைனஸ் பிரச்சனை உள்ள போது இரண்டு முறை குடியுங்கள்.
தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்தால் போதும் உடனடியாக இந்த பிரச்சனை தீர்ந்துவிடும். பின் இந்த தொல்லை வரவே வராது. முடிந்தால் மாதம் ஒருமுறை இதனை குடித்து வர முற்றாக சைனஸ் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைத்துவிடும்.!