மஞ்சள் பயன்படுத்துவதால் ஆபத்து..! மஞ்சள் வாங்கும் போது இவற்றை பார்த்து வாங்குங்கள் இல்லாவிட்டால் மரணம் வரை செல்லவேண்டி வரும்..!!
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தொற்று நோயால் சில பொருட்களின் விலையை வியாபாரிகள் தாமாகவே அதிகரித்தனர். அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு விலை அதிகரித்த பொருட்களில் மஞ்சளும் ஒன்றாகும்.
இலங்கைக்கு இது வரை இந்தியாவில் இருந்து மஞ்சள் இறக்குமதி செய்யப் பட்ட நிலையில் லாக்டவுன் காரணமாக அவை இடை நிரூத்தப் பட்டது. மஞ்சள் மக்களின் வாழ்க்கைக்கு கட்டாயமான பொருள் இல்லாவிட்டாலும் கிருமி நாசினியாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் 1250 ரூபாய்க்கு விற்பனையான மஞ்சள் தூள் தற்போது 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகின்றது. ஆனால் 5000 ரூபாய் கொடுத்து வாங்கப் படும் மஞ்சள் நஞ்சுத் தன்மையை உள்ளடக்கியதாக இருப்பதாக இலங்கை சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மஞ்சளின் விலை அதிகரித்துள்ளதால் கலப்படம் செய்யப் படுவதுடன் பாதுகாப்பற்ற இரசாயன கலவைகள் கலக்கப் படுகிறது, அத்துடன் அளவிற்கு அதிகமான சாயம் கலக்கப் பட்டு நிஜ மஞ்சள் போலவே விற்பனை செய்யப் படுகிறது. நிஜ மஞ்சளுக்கும் கலப்பட மஞ்சளுக்கும் சிறிதளவு கூட வித்தியாசம் காணமுடியாது,
ஆனால் கலப்படம் செய்யப் பட்ட போலியான மஞ்சள் ஆபத்துகள் நிறைந்ததாக உள்ளதாகவும் இதுவரை மஞ்சளில் கலப்படம் செய்தவர்கள் 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மக்கள் மஞ்சள் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்கும் படி கூறப்படுகின்றது, சாதாரண மஞ்சளின் மனம் நிறம் இல்லாவிட்டால் வாங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது..!!