சொறி, மற்றும் அடிக்கடி ஏற்படும் புண்களுக்கு 1 ரூபாய் செலவின்றி உடனடி தீர்வு…! அதிகம் பகிருங்கள்…!!
நகர்புறத்தில் சிறிய நோய் என்றாலும் வைத்தியசாலை ஓடி விடுவார்கள். ஆனால் கிராமத்து மக்களால் அப்படி ஓட முடிவதில்லை இதற்காகு ஒரு பக்கம் வீட்டில் தாத்தா பாட்டி இருந்து இயற்கை மருத்துவத்தின் மூலம் குணப் படுத்துவது. அடுத்தது அடிக்கடி வைத்தியசாலை செல்லும் அளவிற்கு பணம் இல்லாமை.
எது எப்படி இருந்தாலும் நகரத்தில் வாழ்கின்றவர்களை விட கிராமத்தில் வாழ்கின்றவர்கள் உடல் ஆரோக்கியமாக இருகின்றனர். சரி இன்று நாம் பார்க்கப் போவது புண் குணமாகும் மருத்துவத்தை தான். வயல்வேலை செய்பவர்களுக்கு ஏதாவது ஒரு புண் வந்துகொண்டே இருக்கும்..இதனை இப்படியே விடுவது ஆபத்தானது.
குழந்தைகளாக இருந்தால் கூட இதனை பயன்படுத்தலாம். முதலில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் சிறிதளவு சேர்த்து புண் உள்ள இடத்தை நன்றாக துப்பரவு செய்து கழுவி கொள்ளுங்கள். பின் மெல்லிய துணி ஒன்றில் ஒற்றி தண்ணீர் தன்மை இல்லாது துடைத்தபின்.
புண்ணில் சிறிது நல்லெண்ணை விட்டு விடுங்கள். அது அப்படியே இருக்கும் போது.. புங்கன் இலை, மற்றும் வெள்ளெருக்கு இலையை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சட்டியில் நல்லெண்ணை சிறிதளவு ஊற்றி அதில் அரைத்த கலவை மற்றும் சிறிதளவு மஞ்சள் சேர்த்து சூடாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை மெல்லிய துணி ஒன்றில் வைத்து மடித்து புண்ணில் மருந்தின் சாறு படும் படி கட்டிவிடுங்கள். இது புண்ணுக்கும் கிருமிகள் செல்வதை தடை செய்வதுடன் சீக்கிரம் காதம் ஆறிவிடும்..!! இது சொறி, சிரங்கு உள்ளவர்கள் கூட பயன்படுத்தி சீக்கிரம் பயன் பெறலாம்..!!