பிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை..!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாத் (24) – சுப்ரீதா கணவன் மனைவியினருக்கு சென்ற மே மாதம் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.அந்த பெண் குழந்தைக்கு நிகாரிகா என்று பெயர் சூட்டி அன்பாக பார்த்து வந்தார்கள்.
சுப்ரீதாவின் கணவர் தன்னுடைய உடன்பிறப்புகளுக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும் கோபம் அடைந்த மஞ்சுநாத் தனக்கு பிறந்த பெண் குழந்தையை அடியோடு வெறுத்து வந்தார்.
மேலும் ஜூன் மாதம் 18ம் திகதி அன்று வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றார்கள்.அவரது மனைவியும் துணி துவைத்துக்கொண்டிருந்தார்.அந்த நிலையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்த சுப்ரீதா, குழந்தையின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியில் ரத்தம் அவதானித்தார் குழந்தை சுயநினைவில்லாமல் இருப்பதை பார்த்து அவள் அதிர்ச்சி அடைந்தாள்.
இது தொடர்பாக கணவரை கேட்ட போது னக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தேன். எனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறினார். உடனே அவர் வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்று பரிசோதித்த போது, குழந்தை உயிரிழந்தாகவும், இது பற்றி பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு மருத்துவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அறிந்த ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சுப்ரீதா வீட்டின் முன் நின்றார்கள்.இங்கு இருப்பவர் யாரும் பொலிஸிற்கு தகவல் கூற கூடாது எனறு மிரட்டிய மஞ்சுநாத்.பின்பு தனது குற்றத்தை மறைக்க பெரிதும் போராடினர்.அவள் தனது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டு பொலிஸிற்கு தகவல் கொடுத்துள்ளார்.பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பெண் குழந்தையால் வீட்டிற்கு கெடுதல் நடக்க போகிறது என்று ஜோதிடர் கூறியதால் தான் கொலை செய்தேன் என்று குற்றத்தை ஒப்பு கொண்டார்.
ஜோதிடரின் பேச்சினால் பிஞ்சுக்குழந்தையை தந்தையே கொடூரமாக கொலை செய்தார் என அப்பகுதி தெரிய வந்தது.பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.