கோமாளித்தனம் செய்தவர்களுக்கு பொலிஸ் கொடுத்த சோதனை!
ட்ரெண்டிங்கில் வரவேண்டும் என்பதற்காக தற்கால இளைஞர்கள் பல்வேறு கோமாளித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வரிசையில், இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது சோப் போட்டுக் குளித்துள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு கோமாளித்தனத்தைச் செய்துள்ளனர்.
இந்த வீடியோவால் குறித்த இருவருக்கும் பொலிஸ் வலை வீசியது. அதன்படி அவர்களது மோட்டார் சைக்கிளில் இலக்கங்களை வைத்து வியட்நாம் நகர பொலிஸார் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம், இன்ஸ்சுரன்ஸ் போன்றவை வைத்திருக்காமை மற்றும் தலைக்கவசம் அணியாமை போன்ற குற்றங்களுக்காக அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
https://www.facebook.com/watch/?ref=external&v=169846770995125