நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் மீண்டும் நீடிப்பு..!!
நேபாளத்தில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். அங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த உறங்கு உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இருந்தது.
அதைத் தொடர்ந்து துணைப் பிரதமர் ஈஸ்வர் போகரேலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.