தாய்லாந்தில் குரங்குகள் மீது கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை ஆரம்பம்..!!
தாய்லாந்தில் குரங்குகள் மீது கொரோனா தடுப்பூசி சோதனையை தொடங்கிவுள்ளது.
தாய்லாந்தில் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி, வெற்றிக்கரமாக எலிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது குரங்குள் மீது சோதனை செய்யப்படுகிறது. அதன் முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் தெரிந்து விடும் என்று தாய்லாந்தின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் சுவித் மெசின்சே கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் சோதனை வெற்றி அடையும் பட்சத்தில் தடுப்பூசிகள் தயாரிக்க 2 நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.