இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்க ஓநாய் வீரர்களை களமிறக்கியுள்ள சீனா..!!
கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற நாடாகிய சீனா தற்போது wolf warriors என்று அழைக்கப்படும் ஓநாய் வீரர்கள் படையை அமெரிக்கா மற்றும் இந்தியாவை சமாளிக்கும் முயற்சியில் களமிறக்கியுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவை சமாளிக்க களமிறக்கப்பட்ட ஓநாய் வீரர்கள் படை என்பது ஆயுதங்களை கையில் தாங்கி தாக்குதல் நடத்த மாட்டார்கள். மாறாக ஓநாய் வீரர்கள் படைநேரடியாக இணையத்தில் தலைவர்களை தாக்கும் படை ஆகும். அதேவேளை ராஜாங்க ரீதியாக காரியங்களை சாதிக்கும். இன்னொரு பக்கம் சிக்கிம் எல்லையிலும் பதற்றம் நீடித்து வருகிறது
வெளிநாடுகள் இணையத்தில் செய்யும் பிரசாரங்களை முற்றாக நீக்க ஓநாய் வீரர்கள் சீன இறக்கியுள்ளன. ஆனால் இவர்கள் பேக் ஐடி கிடையாது. அதற்காக அரச பணியாளர்களை நியமிக்கும் பணிகளை செய்து வருகிறது. அதாவது சீனாவின் புதிய ராஜாங்க ரீதியான திட்டங்கள் மற்றும் வெளியுறவு கொள்கையில் ஓநாய் வீரர்கள் படை களமிறக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் போர் ரீதியான ஒப்பந்தங்கள், மிரட்டல்களை இவர்கள் தான் செய்யப் போகிறார்கள். ஒரு சின்ன உதாரணமாக தற்போது தைவானுடன் இருக்கும் பிரச்சனையை சீனாவின் அமைதியான வெளியுறவுத்துறை அதிகாரிகள் கவனிக்க மாட்டார்கள். மாறாக தைவான் பிரச்சனையை ஓநாய் படை வீரர்கள் கவனித்துக் கொள்வார்கள்.
சமீப காலமாக இந்தியாவிற்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு எதிராகவும் சீனா கடுமையாக குரல் கொடுத்து வருகிறது. வெளிப்படையாக இவர்கள் எச்சரிக்கை விடுக்க தொடங்கியுள்ளது அதன் பின்னர் இந்த ஓநாய் வீரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குழு சீனாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள், இராணுவ மேஜர், செய்தியாளார்கள், அரசியல் விமர்சகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு நாட்டை அவமானப்படுத்துவது. அந்நாட்டை இகழ்ந்து பேசுவது. அந்த நாட்டை மிக மோசமாக மிரட்டுவது. ரகசியங்களை வெளியிட போவதாக மிரட்டுவது, உளவு தகவல்களை வெளியிட போவதாக கூறுவது ஓநாய் வீரர்கள் படையின் முக்கிய ஸ்டைல் ஆகும்.
இவற்றுக்கு முன்னர் சீனாவில் இருந்து சாந்தமான வெளியுறவுத்துறை அதிகாரிகள் போல இவர்கள் இருக்க மாட்டார்கள். மிகவும் மூர்க்கமாக ராஜாங்க ரீதியான கொள்கையை இவர்கள் கொண்டு இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவை அமெரிக்கா இகழ்ந்து வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது அமெரிக்காவை இகழும் பொருட்டு ஓநாய் வீரர்கள் படைகள் களமிறக்கப்பட்டுள்ளது என்று சீன கூறுகிறது.